Wednesday, July 7, 2010
நடுமுள்
அந்தப் பக்கம்
சுழல்கிற கோள்களூம்
நகர்கிற சதுரங்களுமாய்
மாற்றி வைத்தன
வாழ்க்கையை!
இந்தப் பக்கம்
ஒன்பது சுற்றுகளும்
பரிகாரங்களுமாய்
ஏற்றி வைத்தன
வாழ்க்கையை!
ஏற்ற இறக்கங்கள்
பாவங்களிலும்
பரிகாரங்களிலும்
எப்படியோ
நடுமுள் தொட
பாவம்...
ஏறி
இறங்கிய
மனிதன் தான்
கட்டங்களுக்கும்
சட்டங்களுக்கும்
நடுவில்....
ஆடிக் கொண்டே...
வாழ்க்கையின்
நடுமுள் மட்டும்
நழுவிக் கொண்டே...
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கனம் கொள்ளுது மனம்....
Post a Comment