எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!
கண்ணைக் கசக்கி
கைக்குட்டையை
ஈரப்படுத்தி
கண்ணிலிருந்த
அத்தனை தூசியும்
அகற்றி
கண்களை இடுக்கி
உற்று நோக்கியபின்
தெளிவாய்த் தெரிந்தது....
எனக்கு
ஒன்றுமே
தெரியவில்லையென்று!
2 comments:
ஒன்றும் தெரியாதென ஒத்துக்கொள்ளத்தான் அதிக ஞானம் தேவை....
ஞானிக்கு வாழ்த்துக்கள்!
thanks for the pattam :-)
Post a Comment