பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Tuesday, September 21, 2010

தத்துப்பித்து தத்துவம்

என் கனவுகள் எல்லாம்

 கலைந்து போயின!

உணர்வுகள் கூட

உலர்ந்து போயின!

தொட்டால் சுருங்கும் செடியினைப் போல

பட்டு சுருங்கியது எனது உள்ளம்!


விதியா வினையா

இயற்கை விளையாட்டா

எதுவென்றே புரியாமல்

ஏறி இறங்கியது வாழ்க்கை!

அதெல்லாம் சரி!

பள்ளி முடித்த குழந்தை

படிக்கட்டு ஏறுகையில்

இந்தத் தத்துவமெல்லாம்

அவள் தத்துப்பித்துமுன்

தானே வெளியேற

குழந்தையோடு குழந்தையாய் நான்!