பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Monday, July 19, 2010

கலியாணம் முடிச்சாச்சி!




கைகளிலும் தூக்காமல்

கழற்றியும் எறியாமல்

கால்களை பக்கம் சாய்த்து

கால்விரல் தரை தேய்த்து

எத்தி எத்தி

தத்தி தத்தி

பிய்ந்த செருப்போடு

சப்பாணி நடைபோட்டான்

எங்கள் ஊர் மாடசாமி!


எதிர்வந்த பெருமாள்

சட்டென கேட்டான்

" தச்சித்தான் போட்டாலென்ன

தலையா போகும்?!"

"எனக்கு கண்ணாலம் ஆகி

ஏழெட்டு வருஷமாச்சி!"

அசட்டுச் சிரிப்போடு

மாடசாமி சொல்ல

நமட்டுச் சிரிப்போடு

புரிந்ததாய்

புன்னகைத்தான்

பேச்சுதந்த பெருமாள்!

கல்யாணம் ஆகாத

எனக்கு மட்டும் தான்

எதுவும் புரியவில்லை!

2 comments:

வள்ளுவம் said...

மிகவும் அருமை… .... வாழ்த்துக்கள்....

Abhi said...

nandri!

Post a Comment