Saturday, July 17, 2010
கவிதையும் காதலும்
ஒரு விதை
கவிதையாவதைப்
போலத்தான்
ஒரு பார்வை
காதலாகிறது!
எழுத்து
ஒவ்வொன்றும்
எங்கிருந்தோ வந்து
காகிதத்தில்
விழுவது போல்
எங்கிருந்தோ
புறப்பட்டு
இதயம் நகர்கிறது
காதல் உணர்வு!
ஒவ்வொரு வாக்கியமும்
படிக்கப் படிக்க
கவிதா உலகுக்கு
இடம் பெயரும் ரசிகன்போல்
காதலின்
ஒவ்வொரு
படிக்கட்டிலும்
இடறி இடறி
சொர்க்கம் நோக்கி
புலம் பெயருகின்றனர்
காதலர்கள்!
கவிதையில்
புதுமையும் மரபும்
கலந்தே குழைவதைப்போல்
காதலும் கூட
முரணின் உருவம்தான்!
கவிதை
ரசிக்கத்தக்கது!
காதலும்தான்!
கவிதை
வியக்கத்தக்கது!
காதலும்தான்!
கவிதை வெட்கப்படும்!
காதலும் தான்!
கவிதை துக்கப்படும்!
காதலும்தான்!
ஆனாலும்
கவிதையும் காதலும்
வேறு வேறுதான்!
கவிதை படித்தால்
முடிந்துவிடும்!
காதலித்தால்
காதல் முடியுமா.........?
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எல்லாக் காதலும் அமரக் காதல் அல்ல...
சிலது தொடரும் பலது முடியும்.
கவிதை முடியாது....முற்றுப் புள்ளியில் தொடங்கும் கவிதைகள் பல....
அப்படியா?
சூப்பர் கவிதை .......வாழ்த்துகள்
அருமை ...
MOONDRAM KONAM IS A KALEIDOSCOPE. Ovvoru konathilum oru puthia kalaivannam kattukirathu.
AGRI SIVA
நன்றி rk guru, கபிலன் மற்றும் பானுமதி!
Post a Comment