Monday, July 19, 2010
கலியாணம் முடிச்சாச்சி!
கைகளிலும் தூக்காமல்
கழற்றியும் எறியாமல்
கால்களை பக்கம் சாய்த்து
கால்விரல் தரை தேய்த்து
எத்தி எத்தி
தத்தி தத்தி
பிய்ந்த செருப்போடு
சப்பாணி நடைபோட்டான்
எங்கள் ஊர் மாடசாமி!
எதிர்வந்த பெருமாள்
சட்டென கேட்டான்
" தச்சித்தான் போட்டாலென்ன
தலையா போகும்?!"
"எனக்கு கண்ணாலம் ஆகி
ஏழெட்டு வருஷமாச்சி!"
அசட்டுச் சிரிப்போடு
மாடசாமி சொல்ல
நமட்டுச் சிரிப்போடு
புரிந்ததாய்
புன்னகைத்தான்
பேச்சுதந்த பெருமாள்!
கல்யாணம் ஆகாத
எனக்கு மட்டும் தான்
எதுவும் புரியவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிகவும் அருமை… .... வாழ்த்துக்கள்....
nandri!
Post a Comment