Wednesday, July 14, 2010
பயணம்
உதிரும் இலைகளைப் பார்த்து
மரம் கேட்டது
'என்னை விட்டு
எங்கே போகிறீர்கள் என"
இலைகள் சொல்லின
"நீயல்லவா எங்களை விட்டு
போய்க்கொண்டிருக்கிறாய்!"
பெய்யும் மழைத்துளி பார்த்து
மேகம் கேட்டது
"என்னை விட்டு
எங்கே பொகிறீர்கள் என!"
மழைத்துளிகள் சொல்லின
"நீயல்லவா எங்களை விட்டு
போய்க் கொண்டிருக்கிறாய்!"
ஓடும் நொடிகளைப் பார்த்து
மனிதன் கேட்டான்
'என்னை விட்டு
எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்" என!
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
gud one this abi....
Post a Comment