Wednesday, July 7, 2010
முடிவு
எவ்வளவோ
சோதனை வந்தும்
இறுதியில்
நல்லவனே ஜெயித்தான்!
பணபலம் இருந்தாலும் கூட
லஞ்சம் வாங்கிய
மந்திரி சிறை சென்றார்!
காதலர் இருவரும்
இனிதே இணைந்தனர்!
கெட்டவன் அழிந்ததால்
ஊருக்கே மகிழ்ச்சி!
எதிர்பார்த்த
முடிவுதான்!
ஆனாலும்
ஏகோபித்த
வரவேற்பு!
"சுபம்" என்ற
வார்த்தை பார்த்து
திரையை விட்டு
கண்ணெடுத்தான்
சாமானியன்!
வெளியே
நிஜ உலகம்
எதிர்பாரா முடிவுகளுடன்
அவனுக்காக
காத்திருந்தது!
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஹூம்....யதார்த்தம்.....வேறென்ன சொல்ல?
Post a Comment