Friday, July 9, 2010
காணாமல் போன கனவுகள்
காணாமல் போன
என் கனவுகளை
யாரேனும்
கண்டெடுத்தால்
அதை
கண்ட இடத்திலேயே
போட்டு விடுங்கள்!
அவை
திருவிழாவில்
தொலைந்த குழநதைபோல்
பெற்ற என்னிடம்
வரத் துடிக்கும்!
ஆனாலும்
நீங்கள்
அவற்றை
என்னிடம்
சேர்க்காதீர்கள்!
நான்
நிஜமாக்க
முடியாத
கனவுகள் எல்லாம்
மனைவியாக்காத
காதலிகள் போல!
உங்களிடம்
குழந்தை போல்
அழும் கனவுகள்
என்னிடம்
மறந்த காதலியாய்
கேள்வி கேட்கும்!
அதனால்...
கனவுகள்
தொலைந்தே போகட்டும்!
கனவுகளை
கண்ட
இடத்திலேயே
விட்டு விடுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஒட்டியிருக்கும் கனவுகளை உரித்துப்....
தைத்துக் கிடப்பதை தவிர்ப்பது எப்படி?....
"மனைவியாக்காத ........."
வரிகள் அருமை.....
Post a Comment