Friday, July 16, 2010
அடையாளம்
விரல் நுனி ரேகைகள்
நுழைபவன் அடையாளம்!
இதழ் நுனி இளிப்புகள்
குழைபவன் அடையாளம்!
உருகும் பனிப்போர்வை
உதித்ததின் அடையாளம்!
புரிதலும் புன்னகையும்
மனிதத்தின் அடையாளம்!
அருகாமை நாடல்கள்
அன்பின் அடையாளம்!
நெருடாத ஊடல்கள்
நேசத்தின் அடையாளம்!
புரிகின்ற பொருளெல்லாம்
படைப்பின் அடையாளம்!
புரியாத புதிர்களெல்லாம்
படைத்தவன் அடையாளம்!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நன்றாய்த் தெரியுதுந்தன் அறிவின் அடையாளம்!
நண்பா... "கவிஞன்" என்பது உனக்கே அடையாளம்!
//புரிகின்ற பொருளெல்லாம்
படைப்பின் அடையாளம்!
புரியாத புதிர்களெல்லாம்
படைத்தவன் அடையாளம்! //
உணர வேண்டிய வரிகள்
thanks shahi & kathir!
Post a Comment