சுட்டும் விழிச்சுடர்! கட்டும் கருவிழிகள்!
பொட்டும் பூவும் பரிமளிக்க
பட்டும் மேனியாய் அவள் தரிக்க- மின்
வெட்டும் நின்றது போல் அவள் சிரிக்க –இது
கொட்டும் அருவியோ சிட்டுக் குருவியோ என திகைக்க
தட்டும் உணவும்போல் இணைய மனக்கதவை
தட்டும் அவள் கைகள் கனவில்! காதல்
மெட்டும் கூட காதில் கேட்கிறது! இன்பம்
கிட்டும் கிட்டுமென்ற அசரீரி கேட்கிறது!
தொட்டும் தொடாமலும் என்னருகில் அவள்
மட்டும் இருந்திருந்தால் கனவுகள் நினைவேதான்! ஆனால்
சிட்டும் அவளோடு அஞ்ச வைக்கும் அண்ணன்
வெட்டும் வீச்சரிவாள் இல்லாமலே பயமுறுத்த
பட்டும் படாததுபோல் பாசாங்கு நான் செய்தேன்
3 comments:
நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி .
CLICK AND READ
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
....
nice
Post a Comment