எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!
தண்டச்சோறு
ஊர்சுத்தி என்று
சதா சர்வகாலமும்
திட்டினாலும்
நான் எடுப்பேன்
எனத் தெரிந்தே
ஓரம் கிழிந்த அவர்
சட்டையின் பையில்
என் அப்பா வைக்கும்
அந்த நூறு ரூபாய்த்
தாளின்
வியர்வைக் கரையில்
தெறிக்கிறது
எனக்கும்
என்
தந்தைக்குமான பாசம்!
கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க :
2 comments:
manasu kashttamaa irukku....
நண்பா!!! கொன்னுபுட்டீங்க....
Post a Comment