என் கனவுகள் எல்லாம்
கலைந்து போயின!
உணர்வுகள் கூட
உலர்ந்து போயின!
தொட்டால் சுருங்கும் செடியினைப் போல
பட்டு சுருங்கியது எனது உள்ளம்!
விதியா வினையா
இயற்கை விளையாட்டா
எதுவென்றே புரியாமல்
ஏறி இறங்கியது வாழ்க்கை!
அதெல்லாம் சரி!
பள்ளி முடித்த குழந்தை
படிக்கட்டு ஏறுகையில்
இந்தத் தத்துவமெல்லாம்
அவள் தத்துப்பித்துமுன்
தானே வெளியேற
குழந்தையோடு குழந்தையாய் நான்!